ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – IRCTC BOB கார்டு அறிமுகம்!
இன்றைய காலகட்டத்தில், ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. எனவே ரயில்வே துறையில் ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் முன்பதிவை ஊக்குவிக்கும் விதமாக அடிக்கடி புதிய வகையிலான ஆஃபர்களை IRCTC வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது BOB என்ற கிரெடிட் கார்டு அறிமுகம் ஆகி உள்ளது.
BOB கார்டு அறிமுகம்:
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான சலுகைகளை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஊக்குவிக்கும் விதமாக, IRCTC BOB ரூபே காண்டாக்ட்லெஸ் கிரெடிட் கார்டை (IRCTC BoB RuPay contactless credit card) அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, பாங்க் ஆஃப் பரோடா ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (BBFSL) உடன் கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார்டு வழியாக ஆன்லைனில் கட்டணம் செலுத்தினால் அவர்கள் சலுகைகளுடன் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இந்த BoB கார்டை பயன்படுத்தி AC ரயிலில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்பவர்களுக்கு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும். இதனை தொடர்ந்து இந்த கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் அதிக நன்மைகளை அடையாளம்.
1.பிஒபி கார்டை எரிபொருள் முதல் மளிகை பொருட்கள் வரையிலான உங்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும்போது, பல சலுகைகளை அளிக்கிறது.
2. இந்த கார்டின் மூலம் IRCTC இணையதளத்தில் ஏசி கோச், எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் புக் செய்யும் போது அவர்களுக்கு 40 ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்கும்.மேலும் அனைத்து ரயில்வே முன்பதிவுக்கு 1% கட்டண விலக்கு பெறலாம்.
3. பிஒபி கார்டை பெற்ற 45 நாட்களுக்குள் 1000 ரூபாய் செலவு செய்தால், 1000 ரிவார்டு பாயிண்ட், மளிகை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் உபயோகிக்கையில், ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 4 ரிவார்டு பாயிண்ட்கள் மற்றும் மற்ற அனைத்து பரிவர்த்தனைகளுக்கு 2 ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்கும்.
4.IRCTC யில் இந்த கிரெடிட் கார்டு தினசரி 7 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவுகள் நடைபெறுவதாகவும், கிரெடிட் கார்டு அறிமுகமானது கண்டிப்பாக பெரிய அளவிலான எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தலைமை இயக்க அதிகாரி பிரவீணா ராய் தெரிவித்துள்ளார்.