உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு! உலக நாடுகள் நிம்மதி!
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டினர்களை மீட்க வேண்டும் என்பதற்காக இன்று தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்ய உள்ளதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்காலிக போர் நிறுத்தம்
உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர உள்ளதாக தெரிவித்ததால் இதனை எதிர்த்து ரஷ்யா போர் தொடுக்க முடிவு செய்தது. அதன்படி உக்ரைன் பல நகரங்களில் ரஷ்யாவின் ராணுவ படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அண்மையில் நடைபெற்ற 2ம் கட்ட பேச்சு வார்த்தையிலும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே இன்று 10வது நாளாக தொடர்ந்து போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் நாட்டில் பல்வேறு உயிர் சேதங்களும் ராணுவ தளவாடங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம்!
அத்துடன் உலகின் பல நாடுகளும் இந்த போர் நிறுத்த ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்துள்ளன. மேலும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளுக்கிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் உலக நாடுகள் பலவும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. இதையடுத்து உக்ரைனில் இருந்து 10 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலால் 1.20 கோடி மக்கள் இடம் பெயர வாய்ப்பு உள்ளதாகவும் ஐ.நா கூறியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.90,000 வரை சம்பள உயர்வு! விரைவில் அமல்!
இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டு மக்கள் சிக்கியுள்ளன. இவர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அத்துடன் இந்தியர்களை மீட்கவும் ரஷ்யா இந்த போரை நிறுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இந்தியா சார்பாகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மனிதாபிமான அடிப்படையில் உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு போர் நிறுத்தப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டின மக்களை காப்பாற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக நாடுகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்