தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழகத்தில் சுமார் 7,300 அரசு பஸ்களை முழுமையாக இயக்கவும், புதிய பஸ்கள் கொள்முதல், பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஸ் பயணம்
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பஸ் போக்குவரத்துகள் போன்றவற்றிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆரம்பத்தில் ஒரு சில மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டது. அதை கட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை சற்று கட்டுக்குள் வந்த நிலையில், ஓரிரு தளர்வுகள் அழிக்கப்பட்டன.
ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட் – அரசு புதிய உத்தரவு!
அந்த வகையில் பஸ் போக்குவரத்து அந்தந்த மாவட்டங்களில் மட்டும் செயல்பட்டு வந்தனர். பஸ்களில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட பட்டிருக்க வேண்டும் எனவும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் 50 % வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. பின்னர் திமுக அரசு பிரச்சாரத்தின் போது பெண்களுக்கான இலவச பஸ் பயணம் செய்யும் அறிவிப்பை கூறியிருந்தது.
Exams Daily Mobile App Download
அதன்படி, ஆட்சிக்கு வந்தவுடன் திமுக முதலமைச்சர் பெண்களுக்கான இலவச பஸ் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டத்தால் 107 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இலவசமாக பயணம் செய்தார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டதால் இந்த திட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது. எனவே, பள்ளி மாணவர்கள், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள, 7,300 அரசு டவுன் பஸ்களை முழுமையாக இயக்க வழியுறுத்தப்பட்டது. அதன்படி, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.