ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட் – அரசு புதிய உத்தரவு!
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டது, ஆனால் இப்போது பயனாளிகளுக்கு கோதுமை இல்லை என்று அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு உத்தரவு:
ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு அரசு முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ், ஜூன் 19-30 வரை உத்தரப் பிரதேசத்தில் இலவச ரேஷன் விநியோகிக்கப்படும். ஆனால், இம்முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி விநியோகிக்கப்படும். அதாவது, இந்த முறை உங்களுக்கு இலவச ரேஷனின் கீழ் கோதுமை வழங்கப்படாது. இதுகுறித்து, உணவு மற்றும் தளவாடத் துறை ஆணையரும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் – ஜூன் 21 முதல் விநியோகம்!
இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இதுவரை 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டது. ஆனால் உணவு மற்றும் தளவாடத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி, இம்முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்துடன் சேர்த்து பல மாநிலங்களில் கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. கோதுமை தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோதுமை கொள்முதல் குறைந்ததால், ரேஷன் ஒதுக்கீட்டில் கோதுமையின் அளவைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திற்கு மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கோதுமைக்கு பதிலாக சுமார் 55 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டத்தின் பலனை பெறுவதற்கு, போர்ட்டபிலிட்டி சலான் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆதார் அங்கீகாரம் மூலம் உணவு தானியங்களை எடுக்க முடியாத தகுதியுள்ள நபர்களுக்கு, ஜூன் 30 ஆம் தேதி, மொபைல் OTP சரிபார்ப்பு மூலம் அரிசி விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.