தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
தமிழக அரசின் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் அட்டைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் தொடர்ந்து வாங்க முடியாமல் போனவர்களின் கார்டு ரத்து செய்யப்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு:
இந்திய மக்களின் முக்கிய அடையாள ஆவணமாக ரேஷன் அட்டைகள் இருக்கிறது. தமிழக அரசின் பல நலத்திட்ட உதவிகள் ரேஷன் அட்டைகள் மூலமாகவே ஏழை எளிய குடும்பங்களுக்கு சென்றடைகிறது. அரிசி, பருப்பு, சீனி, மண்ணெண்ணை, சமையல் எண்ணெய் என அனைத்தும் கொடுக்கப்படுவதால் ஏழை எளிய மக்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் தொடர்ந்து பொருள்கள் வாங்க வேண்டும். ஒருவேளை இவற்றை சரிவர தொடர்ந்து வாங்காமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விடும்.
TNPSC Group 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
பொதுமக்கள் 6 மாதம் வரை ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அட்டைதாரருக்கு மலிவான உணவு தானியங்கள் தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்கத் தகுதியற்றவர் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய ஆவணமான ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டால் பெரிய சிக்கல் ஏற்படும். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட ரேஷன் அட்டைகளை எப்படி புதுப்பிப்பது என்பது பற்றிய முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அதற்கு முதலில் மாநில அல்லது மத்திய அரசின் AePDS போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
- https://www.tnpds.gov.in/ போர்ட்டலில் இருக்கும் ‘Ration Card Correction’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் படிவத்தை நிரப்ப வேண்டும்.
- அடுத்தது, உங்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யலாம்.
- விவரங்கள் நிரப்பிய இந்த விண்ணப்பத்தை PDS(பொது விநியோக அமைப்பு) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- ரேஷன் கார்டை ஆக்டிவேட் செய்யவதற்கான விண்ணப்பத்தை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டால், ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும்.