TNPSC Group 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வுகான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் எவ்வாறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 & VAO:
தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் அதிக எண்ணிக்கையானோர் எழுத கூடிய குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பை ஏராளமான தேர்வர்கள் எதிர்பார்த்து வந்தனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2022 மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!
அதன் படி கடந்த மாதம் குரூப்4&VAO அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து தேர்வர்கள் தேர்வு எழுத ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது.
மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். இந்த குரூப்4&VAO தேர்வின் கீழ் மொத்தம் 7,301 காலி பணியிடங்கள் உள்ளதாக TNPSC தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:
https://www.tnpsc.gov.in/Home.