சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40,000ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஆபரண தங்கத்தின் விலை சற்று ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் நகை பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியுடன் உள்ளனர்.
தங்கத்தின் விலை
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக மார்ச் முதல் வாரத்தில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது மேலும், இல்லத்தரசிகளுக்கு இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு அடுத்த நாள் முதலே தங்கம் விலை குறைந்து உள்ளது. ஒரு நாள் குறைவதும், மறுநாள் உயர்வதுமாக கடந்த மாதம் முழுவதும் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்திருக்கிறது.
IRCTC ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ஏற்பாடுகள் அறிமுகம்!
மேலும், கொரோனா அச்சம் குறைந்து வந்த நிலையில் திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண விழாக்கள் நடந்த அனுமதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும் 2 வருடமாக அட்சயதிருத்தி அன்று நகை வாங்க முடியாத காரணத்தால் இந்த வருடம் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. நகையின் விலை எவ்வளவு ஏறினாலும் இல்லத்தரசிகளுக்கு நகையின் மீது உள்ள பிரியம் மட்டும் குறைவதில்லை.
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.5,006-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,048-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400-க்கு விற்கப்படுகிறது.