ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு! உடனே பாருங்க!
உங்களுடைய ரேஷன் கார்டில் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களையும் கண்டிப்பான முறையில் இணைக்க வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் இந்த பதிவு உங்களுக்கு தான். இது பற்றிய முழு விவரங்களை பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
மத்திய அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை தமிழகம் ஏற்று கொண்டு செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் தொடங்கி இயங்கி வருகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளில் ஒரே கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதாவது இந்திய அரசுடைய உணவு பாதுகாப்பு கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மாவட்டங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும். இந்த திட்டத்தின் மூலமாக ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வாங்கலாம் அல்லது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டங்களில் கூட வாங்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த திட்டத்திற்கு தான் நம்மளுடைய ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் கார்டில் பெயர் இருக்கும் குடும்பதாரர்கள் யார் வேண்டுமானாலும் சென்று ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம். குறிப்பாக அவர்களுடைய பயோமெட்ரிக் அதாவது கைரேகை பதிவு செய்யப்படுகிறது. நாம் அனைவரும் ஏற்கனவே ஆதார் கார்டுடன் ஸ்மார்ட் கார்டை இணைத்ததன் காரணமாக நம்முடைய கைரேகை இதில் கண்டறிய முடிகிறது. இதில் நிறைய எளிமையான அம்சங்கள் இருந்தாலும் கூட சில சிரமங்கள் இருக்கும். குறிப்பாக மாநில அரசு வழங்க கூடிய சலுகைகளை நாம் அனைவரும் நம் மாநிலத்தில் பொருட்களை வாங்கினால் மட்டுமே பெற முடியும். அதாவது, மாநிலம் விட்டு மாநிலம் குடி பெயரும் மக்களுக்காக மட்டுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் வந்த பிறகு ரேஷன் விஷயத்தில் பல விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்த ஸ்மார்ட் கார்டில் புதிதாக திருமணமானவராக இருந்தாலோ அல்லது புதிய உறுப்பினர் குடும்பத்தில் நுழைந்தால் அவர்களின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். இப்படி பெயரை சேர்க்காவிட்டால் உங்களுக்கு இழப்பு ஏற்படும். அதாவது ரேஷன் உதவிகளை எந்த விதத்திலும் பெறமுடியாது. குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் இருந்தால் முதலில் அவருடைய ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, திருமணமான பெண் உறுப்பினர் ஆதார் அட்டையில் தந்தையின் பெயரை நீக்கி வீட்டு கணவரின் பெயரை மாற்றி கொள்ள வேண்டும். பின்னர், குழந்தை பிறந்தால் தந்தையின் பெயர் தேவை. அடுத்து, முகவரியை மாற்ற வேண்டும். இந்த செயல் முறைகளை உங்கள் மாநிலத்தில் உள்ள உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.