அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. அதன்படி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் 3% அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருவதன் காரணமாக கடுமையான விலை ஏற்றத்தை சமாளிக்க அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுமே ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கி வருகின்றனர். பணவீக்கம் உயர்வதை பொறுத்தே அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு முடிவெடுக்கும்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – 50 நாட்களில் படிப்பது எப்படி?
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் 5 சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் வரைக்கும் உயர்த்தப்படுவதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை பெறலாம். அதாவது உத்தரகாண்ட் மாநில ஊழியர்கள் 3% அகவிலைப்படி சம்பள உயர்வு அறிவிப்பின்படி 31 சதவீத அகவிலைப்படி வாங்கவுள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் 2.5 லட்சம் ஊழியர்கள் வரைக்கும் பயனடைவார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்குமா என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.