ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஒரே மாதத்தில் இரு முறை தானிய விநியோகம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் காலம் அதிகரித்ததை அடுத்து, தற்போது தகுதியுள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கிடைக்கும்.
முக்கிய தகவல்:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் அனைத்து பணிகளும், ஊரடங்கால் முடக்கப்பட்டன. இந்நிலையில் சாமானிய மக்கள் அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர். எனவே ஏழை எளிய மக்கள் நலன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!
இந்த திட்டத்தில் வழக்கமான மானிய விலையுடன் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. PMGKY திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையும், ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் யோகி அரசாங்கம் ஹோலி வரை இந்த சிறப்பு இலவச ரேஷன் விநியோகத்தை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் PM KISAN 10வது தவணைத்தொகை ரூ.2000 – கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!
இந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நீட்டிப்பதை தொடர்ந்து, ரேஷன் அட்டைதரர்களுக்கு 10 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பயனாளிகள் ஒரு மாதத்திற்க்கு இரண்டு முறை உணவு தானியங்கள் பெறுகின்றனர். அதனுடன் சேர்ந்து, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.