நாடு முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!

0
நாடு முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!
நாடு முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!
நாடு முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!

கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியா அரசாங்கம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது. இது தவிர உணவகங்கள், பார்கள் மற்றும் ஜிம்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸின் புதிய பாதிப்புகள் ஆக்கிரமித்துள்ள நிலையில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தென் கொரியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது, தென் கொரியாவில் கடந்த பிப்ரவரி 2ம் தேதியுடன் முடிவடைந்த சந்திர புத்தாண்டு விடுமுறை கொரோனா தொற்றுநோய் பரவலை தூண்டக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில் அடுத்த 2 வாரங்களுக்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக பிரதமர் கிம் பூ-கியூம் தெரிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் நாளை (பிப்.6) உடன் முடிவடையவிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் PM KISAN 10வது தவணைத்தொகை ரூ.2000 – கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!

இதற்கிடையில், தென் கொரியாவில் கடந்த இரண்டு வாரங்களில் தினசரி புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் அதிகளவு தடுப்பூசி போடப்பட்டிருப்பதால் இறப்பு மற்றும் தீவிர நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் குறைவாகவே உள்ளது. இப்போது வரை தென் கொரியாவில் தினசரி 27,443 புதிய பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அதனால் தனிப்பட்ட கூட்டங்களில் ஆறு நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வரம்புகளை உள்ளடக்கிய கட்டுப்பாடுகள் தற்போது அமலில் இருந்து வருகிறது.

அது நேரத்தில் உணவகங்கள், பார்கள் மற்றும் ஜிம்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட தடைகள் நிமித்தமாக தென் கொரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15 சதவீதத்தை நிதி உதவிக்காக செலவிட்டாலும், தென் கொரியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதத்தை மட்டுமே செலவழித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச டிக்கெட் வெளியீடு!

இப்போது தென் கொரியாவின் மொத்த 52 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 86 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 53.8 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒட்டுமொத்தமாக தென் கொரியாவில் 934,656 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதே நேரத்தில் 6,836 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!