இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரின் கவனத்திற்கு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
பல மக்கள் ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்கி அதை உபயோகிக்காமல் கள்ள சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தகுதியான நபர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:
நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் ரேசன் கடைகளில் கிடைக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாட தேவை பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ஆனால் பலரும் ரேஷன் பொருட்களை வாங்கி அவர்களின் அன்றாட தேவைக்கு உபயோகப்படுத்தாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இதனால் ரேஷன் பொருட்கள் தகுதியானவர்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வதில்லை.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!
தகுதியானவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கட்டாயமாக கிடைக்க வேண்டும் எனவும், தகுதி அற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தற்போது முடிவெடுத்துள்ளது. இதனால் ரேஷன் கார்டு விதிமுறைகள் மாற்றப்பட இருக்கின்றன. தகுதியான ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமே இந்த ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற முடியும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் நோக்கிலேயே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்திற்கான கால வரம்பையும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. எனவே ரேஷன் கார்டுகளின் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு தகுதியான மக்களுக்கு மட்டும் இனி தங்குதடை இல்லாமல் அனைத்து உணவுப் பொருட்களும் சென்றடையும் வண்ணம் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.