10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 இல் ரிசல்ட்!
கேரளாவில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான வகுப்புகள் ஜூன் 1 ஆம் தேதியே தொடங்கியுள்ளன. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எந்த தேதியில் வெளியிடப்படும் என்பதை பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி அறிவித்துள்ளார்.
தேதி அறிவிப்பு:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. மேலும் கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கொரோனா பரவல் குறைந்ததால், மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. நடப்பு ஆண்டு கட்டாயமாக அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் பொதுத் தேர்வு மார்ச் 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி நிறைவடைந்தது. நடைமுறைத் தேர்வுகள் (ஐடி) மே 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் ரெகுலர் பிரிவில் 4,26,999 மாணவர்களும், தனியார் பிரிவில் 408 மாணவர்களும் SSLC யில் பதிவு செய்து உள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து கேரளா பள்ளிகள் ஜூன் 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து பள்ளிகளில் மாஸ்க் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி முன்னதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் தற்போது மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் (எஸ்எஸ்எல்சி-2022) ஜூன் 15ம் தேதி வெளியிடப்படும் என பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். மேலும் முடிவை keralaresults.nic.in , pareekshabhavan.kerala.gov.in மற்றும் sslcexam.kerala.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.