தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் 9 தேதி முடிவடைந்த நிலையில், தற்போது 11ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கி இருக்கிறது.

விடைத்தாள் திருத்தும் பணி:

தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பெருத்தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். மாணவர்களுக்கு அதிகமான விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் கூட பள்ளிகளுக்கு விடப்படாமல் பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தனர். இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது.

ஆதார், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் 2 மடங்கு அபராதம்!

அதனைத்தொடர்ந்து எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்படி,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி நடத்தப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் வரை நடைபெற்றது. ஏற்கனவே அறிவித்திருந்த படி, 10ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஜூன் 1 ல் தொடங்கி 9ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 26 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.

Exams Daily Mobile App Download

மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1- ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கி இருக்கிறது. மேலும் விடைத்தாள்களை திருத்துவதற்காக 40 மையங்கள் உருவாக்கப்பட்டு, இப்பணிக்காக சுமார் 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!