ஏப்ரல் 26 ம் தேதி வரை பள்ளிகள் இயங்கும் – கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கான நடப்புக் கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் குறித்த தகவல்களை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டு உள்ளது.
வேலை நாள்:
2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் தேர்தல் பணிகளை முன்னிட்டு ஏப்ரல் 13 முதல் 21 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் முடிவடைந்துள்ள நிலையில் 4 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக் கல்வித் துறை ஆனது நடப்பு கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வெளியானது ரிப்போர்ட்!
அதன்படி 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், 18, 19ஆம் தேதிகளில் தேர்தல் பணி நாளாக இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து 20, 21 ஆம் தேதி முறையும், 22 மற்றும் 23ஆம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளும் நடக்கும். மேலும் நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாகவும், 24, 25, 26 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என்றும், ஏப்ரல் 26 ஆம் தேதி நடப்பு கல்வி ஆண்டு இறுதிப்பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.