தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வெளியானது ரிப்போர்ட்!

0

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வெளியானது ரிப்போர்ட்!

தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் அறிக்கை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் தீவிரம் காட்டி வரும் நிலையில் இனி வரும் மாதங்களில் வெயிலின் அளவு எவ்வளவு இருக்கும் என்ற அச்சம் எழும்பியுள்ளது. தற்போது சமீபத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் கணிசமாக குறைந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!