தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆதார் அட்டையை இணைக்க கடைசி நாள்!
தமிழக மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் அட்டைகள் இருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க 2022 ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைகள்:
அரசின் பல சலுகைகளும், நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைகள் மூலமாக தான் மக்களிடம் சேர்க்கப்படுகின்றன. அரசு பல சலுகைகளை தினமும் அறிவித்து வருகிறது. ஆனால் அந்த சலுகைகள் மக்களிடம் கொண்டு செல்லும் நேரத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் ரேஷன் அட்டைகள் குறித்த விதிமுறைகளை அடிக்கடி மாற்றி வருகிறது. தற்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருக்கிறது.
TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள்!
இந்த திட்டத்தின் அம்சமாக புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ரேஷன் பொருள்களை முதல் மூன்று மாதங்களுக்கு வாங்கி கொள்ளலாம். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டம் இன்னும் முழுவதுமாக அமலுக்கு வரவில்லை. இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்த ரேஷன் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். அதற்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக வெளியான அறிவிப்பின் படி ஜூன் மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் ஆதாருடன் இணைக்க வேண்டும். இனிமேல் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை. எனவே மக்கள் விரைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டையை இணைக்க UIDAI வெப்சைட் uidai.gov.in மூலமாக ‘Start Now’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களுடைய முகவரி, மாவட்டம் – மாநிலத்தின் பெயரைப் பதிவிட வேண்டும். ‘Ration Card Benefit’ என்ற ஆப்சனை கிளிக் செய்து ஆதார் நம்பர், ரேஷன் கார்டு நம்பர், ஈ-மெயில் ஐடி, மொபைல் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். இதனை பதிவிட்ட பிறகு மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை பதிவு செய்தால் போதும் ஆதார் இணைக்கப்பட்டு விடும்.