TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள்!

0
TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு - முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள்!
TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு - முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள்!
TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளின் தேர்வு நடைமுறைகளை எளிமையாக்கவும், பாதுகாப்பான வெளிப்படை தன்மையை கொண்டு வரவும், புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்ய TNPSC திட்டமிட்டுள்ளது. இந்த வசதிகள் மூலம் இனி TNPSC தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய நடைமுறை:

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கு தகுதியான வேலையை தேடி செல்கின்றனர். அதில் குறிப்பிட்ட சிலர் அரசு வேலை தான் வேண்டும் என்று அதற்கான போட்டித்தேர்வை எழுதி வெற்றி பெற அதற்காக கடுமையாக படித்தும், முயன்றும் வருகின்றனர். அரசு வேலை கிடைப்பது என்பது எளிமை கிடையாது. அதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது. ஆனால் ஒரு சில அரசு வேலையை பணம் மற்றும் அதிகார பலம் மூலம் பெற்று விடலாம் என பல தவறுகளை செய்து வருகின்றனர். தமிழகத்தில் TNPSC தேர்வுகளிலும் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

தமிழகத்தில் மே 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ்!

இந்த மாதிரியான முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறைகளை TNPSC அறிவித்துள்ளது. அந்த வகையில் எதிர்காலத்தில் தேர்வர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’டுக்கு பதில், ‘பயோமெட்ரிக்’ விரல் ரேகை பதிவு முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனைகள் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் கூறியது, TNPSC யால் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் நேர்மை தன்மையை தெரிந்து கொள்ள தேர்வு முடிவுகள் வந்ததும், தேர்வர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை, அந்தந்த துறைகளின் வழியாக முழுமையாக ஆய்வு செய்கிறோம் என்றார்.

Exams Daily Mobile App Download

மேலும் காவல்துறை வழியே தேர்வர்கள் பின்னணியில் குற்றவியல் வழக்கு ஏதும் உள்ளதா, என்பதை ஆய்வு செய்த பின்னரே பணி நியமனம் வழங்கப்படுகிறது. எனவே தேர்வு செய்த பணியாளர்களிடம், போலி சான்றிதழ் பிரச்சனை எதுவும் இருந்ததில்லை என்று கூறினார். ஜூனில் நடக்க உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான தேர்வில், கணினி வழி தேர்வு, பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது. தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்தால், ஆள் மாறாட்டம் என்ற பிரச்சனைகள் அறவே இருக்காது. வரும் காலத்தில் தேர்வர்கள் ஹால் டிக்கெட் எடுத்து வருவதற்கு பதில், தங்கள் விரல் ரேகையை பதிவு செய்தால் போதும் தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என கூறினார். இந்நிலையில் 5831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வருகிற 21 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!