தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் கவனத்திற்கு – நாளை கடைசி வாய்ப்பு!
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் மேலூரில் இருக்கும் கூட்டுறவு துறை வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் பட்டியலில் பெயர் இடம் பெறாத நபர்களுக்கு நாளை தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்தி விட்டனர். அந்த வழிகாட்டுதலின்படி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 110 விதி கீழ் ஐந்து சவரனுக்குள் நகைக் கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது அரசின் சார்பில் மார்ச் மாத இறுதிக்குள் 14.60 லட்சம் நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறியிருந்தார். தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களுக்கு அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவிற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12,19,106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அரசின் சார்பில் தெரிவித்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து மதுரை மாவட்டம் மேலூர் கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், மதுரை மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் தகுதியானவர்களின் பெயர் பட்டியல் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மதுரை மாவட்ட கலெக்டரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து, அந்த பெயர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் நாளை வரை madurai.nic.in என்ற இணையத்தளத்தில் மதுரை துணைப் பதிவாளர், மண்டல இணைப் பதிவாளரிடம் ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்யலாம் என்று இணைப்பதிவாளர் குருமூர்த்தி அறிவித்து உள்ளார்.