தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஆசியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தினால் பணிக்கொடை உள்ளிட்ட எந்த ஓய்வு பலன்களையும் பெற முடியவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தப்பட வேண்டும் என தீவிரமாக போராடி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதனால் அரசு ஊழியர்கள் பலரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – பெற்றோர்கள் புகார்!
மேலும், ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வில்லை என அரசு பணியாளர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் விவகாரம் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஒட்டுமொத்த இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நமது மாநிலத்தில் மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருக்கிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தில் தமிழக அரசு பணியாளர்களுக்கு கடன் பெறும் வசதி இல்லை. அதனால் பழைய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அரசை கேட்டுக் கொள்கிறது.