சென்னைவாசிகள் கவனத்திற்கு – பிப்.19ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அன்றைய தினம் (பிப்.19) கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை:
தமிழகத்தில் 3வது அலை காரணமாக அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
Post Office சூப்பர் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் நடைபெறும் நாளான 19-ம் தேதி, தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பொது விடுமுறை அளித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் – இம்மாதம் வெளியாகும் அறிவிப்பு!
தேர்தல் வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்கப்படுவதால் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மதுபான கடைகள் திறக்க தடை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22ம் தேதியும் மதுபான கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தேர்தல் காரணமாக அன்றைய தினம் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பை கோயம்பேடு காய்கறி அனைத்து சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.