TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் – இம்மாதம் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி இம்மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுக்க்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. TNPSC தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதத்தில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் இம்மாதம் வெளியாகும் என்றும் அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மேலும் குரூப் 2, 2ஏ தேர்வில் 5831 காலிப்பணியிடங்களும், அத்துடன் குரூப் 4 தேர்வில் 5255 காலிப்பணியிடங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போட்டித் தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு பணிபுரிந்து வருகின்றனர்.
மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு நிர்வாகம் விளக்கம்!
இதை தவிர்க்க தமிழ் மொழி தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக TNPSC தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் TNPSC வெளியிட்ட தேர்வு கால அட்டவணைப்படி இம்மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று உறுதி அளித்துள்ளார். TNPSC நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.