TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு 12ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு இன்று சேலம் மாவட்டத்தில் 11 கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்கள் மற்றும் நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள 4 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் பல விண்ணப்பதாரர்களை தேர்வு எழுத தேர்வு மைய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

முதுகலை ஆசிரியர் தேர்வு:

தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடப்பு ஆண்டில் 6 தேர்வுகளை நடத்தி அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 9,499 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1-க்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த 12-ந் தேதி தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

TN TRB TET தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்..!

இந்த தேர்வை பி.எட், எம்.எட்., படித்த பட்டதாரிகள் எழுதி வருகின்றனர். இந்த வகையில் இன்று காலை பொருளியல், தாவரவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், மதியம் விலங்கியல், உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவிற்கும் இணையவழி மூலம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் 11 கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 மையங்களில் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்வில் பலர் பங்கேற்கவில்லை.

மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு நிர்வாகம் விளக்கம்!

எனவே ஏன் தேர்வில் பங்கேற்கவில்லை என சேலம் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கூறியது, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையம் பல கிலோ மீட்டர் தொலைவில் ஒதுக்கீடு செய்தால் காலை 7.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல முடியவில்லை. அதன் பிறகு சென்றதால் தேர்வு எழுத தேர்வு மைய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் 8 மணிக்கு பிறகு தேர்வு மைய வளாகத்தில் முன்பக்க கேட் மூடப்பட்டது. இதனால் பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பழைய நடைமுறையை போன்று விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சொந்த மாவட்டங்களில் தேர்வு எழுத தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!