TNPSC குரூப் 4 தேர்வு வினாத்தாள் பற்றிய முக்கிய அலசல் – மிஸ் பண்ணிடாதீங்க!
குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. சுமார் 7300 பணியிடங்களுக்கு 22 பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தற்போது வினாத்தாள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 1, குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 முதலான தகுதி தேர்வு நடத்தி திறமையான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமையில் தான் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சுமார் 8000 தேர்வு மையங்களில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். மேலும், தேர்வு செலுத்த சென்றவர்களுக்கு வசதிக்காக சுமார் 2,000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், தேர்வெழுத வந்த தேர்வாளர்களின் வசதிக்காக சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
TNPSC குரூப் 4 & VAO எழுதியோருக்கு கட் ஆப் மதிப்பெண் குறித்த விவரம் – தகவல் வெளியீடு!
இருந்தாலும், தேர்வாளர்களின் கூட வந்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் காத்திருக்க போதுமான இட வசதி, குடிநீர் கழிப்பறை வசதிகள் இல்லாமல் தவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை நிறுத்த கூட போதுமான இடவசதி இல்லாமல் பெற்றோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், தொலைதூரத்தில் இருந்து தேர்வெழுத வந்தவர்களால் 9 மணிக்குள் சரியாக வர இயலாததால் எக்கச்சக்கமான மாணவர்களால் தேர்வெழுத முடியவில்லை. மேலும், தமிழ்மொழி, பொது அறிவு ஆகிய இரண்டு பிரிவுகளில் இருந்து எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டன.
தேர்வுக்காக கூடுதல் பயிற்சி பெற்றிருந்தால் கண்டிப்பாக குரூப் 4 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க முடியும். மேலும், பொது அறிவு வினாக்களும் எளிமையாகவே கேட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கணிதத்தை எடுத்து கொண்டால் தனிவட்டி – கூட்டுவட்டி, வேலை ஆட்கள் – நாட்கள், மீச்சிறு பொது மடங்கு ஆகிய பகுதிகளில் இருந்து எளிமையான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளன. அதாவது, 7300 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வை 12 லட்சம் பேர் விண்ணப்பித்து 18 லட்சம் பேர் எழுதி உள்ளனர்.