TNPSC குரூப் 4 & VAO எழுதியோருக்கு கட் ஆப் மதிப்பெண் குறித்த விவரம் – தகவல் வெளியீடு!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த 24ம் தேதி நடைபெற்றது. சுமார் 18.50 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வு
தமிழகத்தில் குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 4 தேர்வு ஆண்டு வெளியான அறிவிப்பில் 7382 பணியிடங்கள் தகுதி உள்ள நபர்களை கொண்டு நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த 7382 பணியிடத்திற்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 18.50 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளனர். இந்தாண்டு குறைவான காலியிடங்களுக்கு அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததால் போட்டி தேர்வு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இவற்றிற்கு மாறாக தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Infosys நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு? ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
இத்தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தாண்டு TNPSC அறிவிப்பின் படி தமிழ் பாடப் பகுதியில் இருந்து 100 மதிப்பெண்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்த தமிழ் மொழித்தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாகவும் தேர்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அத்துடன் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பொது அறிவு கேள்விகள் எளிதாக விடையளிக்க கூடிய வகையில் இருந்ததாகவும் கூறுகின்றனர். தற்போது தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. அதாவது மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் இருக்கும் என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பிருந்தாலும், பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தேர்வின் முடிவுகள் எப்போது என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனையடுத்து வரும் அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.