சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்த கயல் சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்!
தமிழில் மிகப் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக சன் டிவி கயல் சீரியல் உள்ளது . இந்த தொடர் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டது. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தை தனி ஆளாக நின்று, தாங்கும் பெண்ணாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்:
கன்னடத்தில், ஒளிபரப்பான ஒரு சூப்பர்ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரையில் சைத்ரா ரெட்டி என்ட்ரி கொடுத்தார். மேலும் இவருக்கு இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இறுதியில் இணைந்து தமிழில் தனது என்ட்ரியை சைத்ரா ரெட்டி கொடுத்தார். இதையடுத்து ஜீ தமிழின் பெரிய ஹிட் தொடரான யாரடி நீ மோகினி தொடரில் நடித்து அசத்தினார். இந்த தொடரில் ‘ஸ்வேதா’ என்னும் வில்லி கேரக்டரில் முத்துராசுவை விரட்டி விரட்டி காதலித்து ரசிகர்கள் வெறுக்கும் அழகு வில்லியானார்.
விமானத்தில் பணிபுரிய ஆவலா? அட்டகாசமான ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!
இவற்றை தவிர சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கயல் சீரியலில் மொத்த குடும்பத்தையும் தாங்கும் சுமைதாங்கியாக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் ஹீரோவாக நடித்துள்ளார். கயல் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன் வெளியான வலிமை படத்தில் முக்கிய வேடத்தில் சைத்ரா நடித்திருந்தார்.
அதன் பின்பு அவரின் புகழ் சின்னத்திரை, வெள்ளித்திரையில் கொடி கட்டி பறக்க தொடங்கியது. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிடுவதை சைத்ரா வழக்கமாக வைத்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் வாயை பிளக்க வைத்துள்ளது. அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அஜித்தை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகருடன் இவர் நடித்ததற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.