மே 12ம் தேதிக்கு மேல் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு ஆலோசனை!!
கர்நாடகா மாநிலத்தில் பெருகி வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மேலும் நீட்டிக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு அமல்
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிர மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும், வார இறுதியில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. அங்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அம்மாநிலத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 49,058 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரு மாநகரத்தில் மட்டும் 23,706 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தவிர 139 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நோய் தாக்கம் இன்னும் கூட குறையவில்லை. அதனால் இந்த ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிப்பது குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஆலோசித்து வருகிறார்.
நாடு முழுவதும் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
மேலும் கர்நாடகா மாநிலத்தில் சுகாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவை காணப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இவை இன்னும் அதிகரிக்காத வகையில், மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அவசியம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. அதனால் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை மே 12ஆம் தேதிக்கு மேல் மீண்டும் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடியூரப்பா ஆலோசனை செய்து வருகிறார்.