பாரதியை விட்டு பிரிய முடிவு செய்யும் கண்ணம்மா & லட்சுமி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் அர்த்தமில்லாத ஒரு பிரச்சனைக்காக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் 8 வருடங்களாக பிரிந்து இருக்கின்றனர். இவர்கள் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், கண்ணம்மா பாரதியை விட்டு நிரந்தரமாக பிரிந்து விட முடிவு செய்கிறார்.
கண்ணம்மாவின் முடிவு:
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவை காதலித்து அவரின் குணத்தை மதித்து கல்யாணம் செய்து கொள்வார். ஆரம்பத்தில் கண்ணம்மாவை அனைவரும் வெறுத்து ஒதுக்கும் சமயத்தில் கூட கண்ணம்மாவை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்ளும் பாரதி, கண்ணம்மா கர்பமாகிய பிறகு தலைகீழாக மாறுகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் கண்ணம்மா கர்ப்பமானது முதல் அன்பாக மாறுகிறார்கள். ஆனால் பாரதி கண்ணம்மா மேல் சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்.
Exams Daily Mobile App Download
வெண்பா பாரதியின் சந்தேகத்தை அதிகமாக தூண்டி விட்டு அவரை திசை திருப்புகிறார். பாரதியின் பேச்சுக்களை தாங்க முடியாமல் தான் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே வருகிறார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக தனி ஆளாக நின்று தன் மகள் லக்ஷ்மியை வளர்க்கிறார். ஆனால் லக்ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக பாரதி பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிந்து விடுகிறது. இத்தனை வருடங்களாக பாரதியை வெறுத்து வந்த கண்ணம்மா தன் குழந்தைகள் இப்படி தனியாக கஷ்டப்படுவதை பார்த்து மீண்டும் ஒன்று சேர நினைக்கிறார்.
தனத்தின் பிறந்தநாளுக்கு மூர்த்தி கொடுத்த பரிசு, அசந்து போன குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!
ஆனால் பாரதி திரும்ப திரும்ப கண்ணம்மாவை அவமானப்படுத்துகிறார். ஒரு அளவிற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் கண்ணம்மா கோவப்படுகிறார். ஆனால் சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் கண்ணம்மாவை சமாதானம் செய்கின்றனர். இந்நிலையில், ஹேமா பள்ளி விழாவில் கண்ணம்மாவை பத்தி பேசிடியதை அடுத்து பாரதி கண்ணம்மா மீது கோவப்படுகிறார். நீ தான் ஹேமாவிற்கு இப்படி சொல்லி குடுக்கிற என்று, இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மா நிரந்தரமாக பாரதியை விட்டு பிரிய முடிவு செய்து லக்ஷ்மியை அழைத்து கொண்டு செல்கிறார்.