குழந்தை வேண்டும் என்று கேட்கும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன் தனக்கு குழந்தை வேண்டும் என்று தனம் மற்றும் முல்லையிடம் சொல்வது போல இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
எந்தவொரு பெரிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வழக்கமான பாணியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இந்த வார கதைக்களத்தில் தனத்திற்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அரங்கேற இருக்கிறது. அந்த வகையில் இதுவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனத்தின் பிறந்த நாளை சர்பிரைஸ் ஆக கொண்டாட நினைக்கும் குடும்பத்தினர் அவருக்கு நள்ளிரவில் கேக் வெட்டி அசத்துகின்றனர். தொடர்ந்து தனத்தின் பிறந்தநாளுக்காக மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமைக்கப் போவதாக கிளம்பி இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணன் தனக்கு குழந்தை வேண்டும் என்று சொல்வது போல சில காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகி இருக்கிறது. அதாவது, இறந்து போன லட்சுமி அம்மாவை நினைத்து தனம், முல்லை, கண்ணன் மூவரும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, லட்சுமி தனது கனவில் வந்ததாக தனம் சொல்ல என்னுடைய கனவிலும் அம்மா வந்தார்கள் என்று கூறுகிறார் கண்ணன். தொடர்ந்து, அத்தை வந்து உன்னிடம் என்ன பேசினார்கள்.
எதாவது சொன்னார்களா என்று முல்லை ஆர்வமாக கேட்க, ஆமாம். எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று அம்மா ஆசைப்படுகிறார்கள் என்று கிண்டலாக கூறுகிறார் கண்ணன். இதை கேட்டதும் அதிர்ச்சியாகும் தனம் நீ இப்போ தான் படிச்சு முடிச்சிருக்க. அதுக்குள்ள குழந்தை ஆசை வந்துடுச்சா என்று கடுப்பாக பேசுகிறார். பிறகு இவர்கள் இருவரும் ஐஸ்வர்யாவை அழைத்து கண்ணனுக்கு இருக்கும் ஆசையை சொல்ல அவரும் முல்லையுடன் சேர்ந்து கண்ணனை கலாய்க்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.