தனத்தின் பிறந்தநாளுக்கு மூர்த்தி கொடுத்த பரிசு, அசந்து போன குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுள்ளது. இந்த தொடரின் இன்றைய எபிசோட் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இன்று தனம் அவருடைய பிறந்தநாளில் தனது மாமியாரை நினைத்து பார்க்கிறார். அத்தை என்னுடைய பிறந்தநாளை மறக்கவே மாட்டார் ,எனக்கு ஒவ்வொரு நாளும் அத்தை நினைப்பாகவே இருக்கிறது என சொல்கிறார். அப்போது கண்ணன் நீங்க சொல்லிடீங்க என்னால் சொல்ல முடியவில்லை, தினமும் அம்மா என்னுடைய கனவுல வராங்க என சொல்ல, முல்லை வந்து எதாவது அத்தை உன்கிட்ட சொல்லுவாங்களா என கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
அப்போது கண்ணன் சீக்கிரம் பேர குழந்தை பெற்றுத்தர சொல்லி சொன்னதாக சொல்ல, தனமும் முல்லையும் கண்ணனை அடிக்க வருகின்றனர். அப்போது ஐஸ்வர்யா வர கண்ணன் சொன்னதை சொல்கின்றனர். அப்போது ஐஸ்வர்யா, நேற்று அத்தை கனவுல வந்து வடை செஞ்சு தர சொன்னாங்கனு இவன் சொன்னான் ,அதனால் தான் நான் செஞ்சேன் என சொல்கிறார். பின்னர், மீனா வர ஐஸ்வர்யாவிடம் போட்டிக்கு தயாரா இருக்கியா என கேட்கிறார். அப்போது ஐஸ்வர்யா நான் தயார் என சொல்ல 2 மணி நேரத்தில் சமைக்க வேண்டும் என சொல்கிறார்.
பின் இருவரும் சின்ன சின்ன சண்டை போட்டு சமைத்து கொண்டு இருந்தனர். அப்போது மீனா ஐஸ்வர்யாவின் அடுப்பை அணைத்து விட அவர் கோவமாக பேசுகிறார். பின் மீனாவின் அடுப்பை ஐஸ்வர்யா அணைத்து விடுகிறார். மேலும் மீனாவும் ஐஸ்வர்யாவும் ஒன்றுமில்லை என சொல்லி சமைக்க தொடங்குகின்றனர். இதற்கிடையில் மூர்த்தி மற்றும் தம்பிகள் கடையில் இருந்து வந்தனர் அப்போது ஜீவா மீனா எங்கே என கேட்க அவர் தனம் அக்காவிற்காக சமைக்க இருக்கிறார் என சொல்கிறார். ஜீவா அதை கேட்டு அதிர்ச்சி அடைய உண்மையாகவே மீனா சமைக்கிறாளா என கேட்கிறார்.
நடு ரோட்டில் விருந்து சாப்பிட்ட ‘குக் வித் கோமாளி’ பாலா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இதற்கிடையில் தனம், மீனா வாங்கி கொடுத்த பட்டுபுடவையை கட்டிக் கொண்டு வர, இந்த புடவை விலை என்ன என்று கேட்க 5000 ரூபாய் என மீனா சொல்கிறார். இதை கேட்டு மூர்த்தி ஷாக் ஆகி விட்டார். இப்போது கண்ணன் மூர்த்தியிடம் நீங்க என்ன வாங்கி கொடுத்திங்க என கேட்க அவர் ஒரு பேப்பரை நீட்டுகிறார். மேலும் மூர்த்தி கொடுத்ததை வாங்கி பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.