கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – நீதிபதியின் பரபரப்பு கருத்து!

0
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் - நீதிபதியின் பரபரப்பு கருத்து!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் - நீதிபதியின் பரபரப்பு கருத்து!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – நீதிபதியின் பரபரப்பு கருத்து!

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளைக்குள் பெற்றுக் கொள்கிறோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து நீதிபதி சதீஷ்குமார் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பெற்றோர் சம்மதம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியின் வழக்கு, இன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெற்றோருக்கு நீதிபதி காட்டமான கேள்விகளை எழுப்பினார். அதாவது நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை வாங்க மறுப்பது ஏன், பெற்றோர் மீது இந்த நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. ஆனால் மாணவியின் உடல் மீது பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் என காட்டமாக பேசினார். இதையடுத்து பெற்றோர் தரப்பு, தங்களுக்கு மறுஉடற்கூராய்வில் திருப்தி இல்லை. இரு உடற்கூராய்வு வீடியோக்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து நீதிபதி, இரு உடற்கூராய்வு அறிக்கைகளை புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறேன். மேலும் கண்ணியமான முறையில் இறுதி சடங்குகளை நடத்துங்கள். உங்கள் மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகிறார்கள். அது உங்களுக்கே தெரியாமல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சமூக வலைதளங்கள் பொய் செய்தியை பரப்பியுள்ளன. எனவே நாளைக்குள் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன், அப்படி இல்லாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என உத்தரவிட்டார்.

தமிழகத்தில் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

மேலும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்கள் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். மேலும் உடலை பெற்றுக் கொள்வது குறித்து பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கேட்டு ஒரு முடிவை சொல்லுங்கள் என நீதிபதி, பெற்றோர் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகளின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அப்போது நீதிபதி சதீஷ்குமார் நாளை காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும். நாளை மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என கூறினார், மேலும் இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!