தமிழகத்தில் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

0
தமிழகத்தில் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!
தமிழகத்தில் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!
தமிழகத்தில் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழக பள்ளிகளில் 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவர்களுக்கான திட்டங்கள் அவர்களை சென்றடைந்ததா என்பது குறித்து மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆய்வு கூட்டம்:

தமிழகத்தில் 2020, 2021 ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயின்று வந்ததால் கற்றலில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தன்னார்வலர்கள் மூலம் கிராமங்களில் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் 1 – 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கல்வித்துறை கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2025 ம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை வளர்க்கும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல “நான் முதல்வன்”, “என் பள்ளி என் பெருமை” போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை (ஜூலை 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் மாணவர்களை முழுமையாக சென்றடைந்ததா என்பதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் 4 வது ஆய்வு கூட்டம் ஜூலை 26 மற்றும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் பணி விவரங்கள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!