கள்ளக்குறிச்சி விவகாரம்: பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்து நாசம் – அமைச்சர் விளக்கம்!
பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களும் எரிந்து சாம்பலாகி விட்டது. இந்நிலையில், மாற்று சான்றிதழ்களை வழங்குவது தொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும், மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுமட்டுமல்லாமல் பள்ளியின் உடைமை பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி அந்த பள்ளியில் பயிலும் 4500 மாணவர்களின் பிறப்பு சான்றிதழில் இருந்து மாற்று சான்றிதழ் வரைக்கும் அனைத்து முக்கிய ஆவணங்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த கலவரத்தை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த கலவரம் திட்டமிட்டு தான் நடத்தப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான புத்தக சுமையை குறைப்பதற்கான திட்டம் – மத்திய அரசு தகவல்!
இதனிடையே, மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும் என்பதால் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதற்கு தகுந்த விளக்கமளித்துள்ளார். அதாவது, அந்த பள்ளி முழுமையாகவே சேதமடைந்துள்ளதால் அந்த பள்ளியில் மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பள்ளிக்கு அருகிலுள்ள பள்ளியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த பள்ளிக்கு அருகில் 5 அரசு பள்ளி, 17 தனியார் பள்ளி மற்றும் 2 கல்லூரிகள் உள்ளதால் விரைவில் முதல்வருடன் ஆலோசித்து இந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய் துறை மூலமாக மாணவர்களின் மாற்று சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், மாணவர்களுக்கு தற்காலிக மாற்று சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் எம்.காம் படித்துள்ளதால் அவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.