TNPSC: குரூப் 4 தேர்வு மையங்களில் மாற்றம்? தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்- 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 1200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி, தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு மையம் மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி அண்மையில் வெளியிட்டு உள்ளது. மேலும் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு 1200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம்: பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்து நாசம் – அமைச்சர் விளக்கம்!
அதாவது கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனால் தேர்வு நடத்தும் சூழல் இல்லாததால் கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில், புதிய தேர்வு மையமாக நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளி, ஏ.கே.டி. நினைவு வித்யாசாகத் பள்ளி தேர்வு மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய தேர்வுகூட நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.