TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ‘எம்பிஏ பணியமர்த்தல்’ திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நவம்பர் 9 முதல் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அனைத்து விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

தகவல் தொழில்நுட்ப துறையில் இந்த நிதியாண்டில் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அடுத்த 2022ம் நிதியாண்டில் இன்னும் அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு குறிப்பிட்ட நிறுவனமும் தங்கள் இலக்குகளை அறிவித்துள்ளது. அந்தவகையில், TCS நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கோபிநாதன் அவர்கள் தங்கள் நிர்வாகத்தின் சிறந்த திறனை பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் வழிகாட்டுதல்கள்!

இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ‘எம்பிஏ பணியமர்த்தல்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இதற்காக எம்பிஏ பட்டதாரிகளை நியமிக்க உள்ளது. இந்த புதிய பணி வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கும் தேதி புதிதாக நவம்பர் 9 முதல் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிவாய்ப்பிற்கான தேர்வு மற்றும் நேர்காணல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முழுநேர MBA/MMS/ PGDBA/PGDM படிப்பை முடித்திருக்க வேண்டும்.

15 நிமிடத்தில் தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மேலும், 10, 12, டிப்ளமோ, பட்டப்படிப்பு அல்லது முதுகலைத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச மொத்த மதிப்பெண்கள் 60% அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களுக்கான ஒட்டுமொத்த கல்வி இடைவெளி 2 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வியில் ஏதேனும் இடைவெளி இருப்பின் அதை கட்டாயம் அறிவிக்க வேண்டும். -2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார். முன் பணி அனுபவம் இருப்பின் அவை பரிசீலிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!