தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் வழிகாட்டுதல்கள்!
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்டப்பணிகள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க உள்ளது. இதையடுத்து நாளை (09.11.2021) சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கருத்தரங்கு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு 1 – 8 வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
15 நிமிடத்தில் தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
கொரோனா முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் 08.11.2021 முதல் 14.11.2021 வரை கடைபிடிக்கப்பட உள்ளது. இதையடுத்து நாளை (09.11.2021) கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண்கள் ஆணையத்தின் மூலம் கருத்தரங்கு நடைபெற்றது.
பசும்பொன் தேவர் ஐயா குறித்து விஜய் சேதுபதி பேசியது உண்மையா? நடிகர் தரப்பு விளக்கம்!
எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து கருத்தரங்கிற்கு அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இக்கருத்தரங்கிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி மற்றும் நீதிபதிகள் கலந்துக்கொள்ளவுள்ளதால் எவ்வித தவிர்ப்பும் கோராமல் உரிய நேரத்தில் கருத்தரங்கில் கலந்து கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.