15 நிமிடத்தில் தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம். மேலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை தெரிந்து கொள்வோம்.
ரேஷன் கார்டு :
தமிழகத்தில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது பல வாக்குறுதிகளை மகக்ளுக்கு அளித்தார். அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உதவி தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கால தாமதமின்றி 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 100 ரூபாயை தாண்டிய ஒரு கிலோ தக்காளியின் விலை – பொதுமக்கள் அவதி!
குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகைகளில் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டில் உள்ள குறியீட்டை பொறுத்து நீங்கள் எந்த வகை ரேஷன் கார்டு வைத்திருக்கிறீர்கள் என்பதை அறியலாம். புதிதாக ஒருவரி ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க வேண்டும் என்றால் அவரின் ஆதார் அவசியமாகும். தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகம் செல்ல தேவையில்லை எளிதாக வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :
- முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதை கிளிக் செய்து புதிய ரேஷன் அட்டைக்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- Name of family head என்பதில் குடும்ப தலைவரின் பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட வேண்டும்.
- அடுத்ததாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற அனைத்து விவரங்ககளையும் பதிவிட வேண்டும்.
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவத்தேர்வு நவ.16ல் தொடக்கம்!
- 5 MB அளவுள்ள குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அடுத்ததாக இருப்பிட சான்று என்பதில் உங்களின் ஏதேனும் ஒரு இருப்பிட சான்றை பதிவேற்றவும்.
- உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்து பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண், ஆதார் அட்டை ஆகியவற்றை அப்லோடு செய்யவும்.
- நீங்கள் பதிவிட்ட விவரங்கள் ஏதேனும் தவறாக இருந்தால் திருத்தம் என்பதை க்ளிக் செய்து மாற்றி கொள்ளலாம்.
- விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தி வரும்.
- அதில் வரும் குறிப்பு எண்ணை வைத்து உங்கள் ரேஷன் கார்டு எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- பிறகு ஆதார் கார்டு, போட்டோ, விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில் TSO-வில் கொடுத்தால் விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.