தமிழகத்தில் ஜன. 26 குடியரசு தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு!
இந்தியாவில் ஜன. 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் கொடியேற்றுவது குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குடியரசு தின விழா:
இந்தியாவில் ஜன. 26ம் தேதி கோலாகலமாக குடியரசு தினவிழாகொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் முப்படை வீரர்கள், காவல்துறை உள்ளிட்ட துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்!!
இந்த நிலையில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் சில கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்க பெற்றது.
அதனால் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தலைவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.