தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்!!
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக நாளை (ஜன. 21) ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
Pan Card பயன்படுத்துபவர்கள் முக்கிய எச்சரிக்கை.. ரூ.10,000 அபராதம் – இதை மறக்காம செய்யுங்க!!
Follow our Instagram for more Latest Updates
அதனால் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனி நிலவும் இன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன. 22, 23, 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் வெப்ப நிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (ஜன. 20) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய குமரி கடல் பகுதிகளில் வட கிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.