Pan Card பயன்படுத்துபவர்கள் முக்கிய எச்சரிக்கை.. ரூ.10,000 அபராதம் – இதை மறக்காம செய்யுங்க!!
நாட்டில் தற்போது பெரும்பாலான பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமானதாகும். இந்த நிலையில் நீங்கள் பான் கார்டுக்காக ரூ.10,000 அபராதம் செலுத்தாமல் இருக்க கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு:
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு ஆனது அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வரியையும் பான் கார்டு மூலமாக வருமான வரி ஆணையம் கண்காணிக்கிறது. மேலும் நீங்கள் உங்களின் பான் கார்டை தவறவிட்டால் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும்.
மேலும் பான் எண்ணில் பிழை ஏற்பட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும். அத்துடன் வருமான வரி ஆணையத்திடம் நீங்கள் தவறான பான் தகவலை வழங்கினால் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். இதையடுத்து தற்போது, நீங்கள் 2 பான் கார்டுகளை வைத்துள்ளீர்கள் எனில் இதற்கும் அபராதம் செலுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல் 2வது பான் கார்டு உடனடியாக வருமான வரி துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.
மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டம் – வலுக்கும் எதிர்ப்புகள்!
Follow our Instagram for more Latest Updates
இதனை நீங்கள் நேரடி மற்றும் ஆன்லைன் என 2 முறைகளில் மேற்கொள்ளலாம். தற்போது ஆன்லைன் முறையில் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
1. இதற்கு முதலில் incometaxindia.gov.in என்ற தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இப்போது ‘புதிய பான் கார்டு/மாற்றத்திற்கான கோரிக்கை’ அல்லது ‘பான் தரவு திருத்தம்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. இப்போது தோன்றும் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து, ஏதேனும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.