மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – DA உட்பட 3 கொடுப்பனவுகள் உயர்வு? விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, பயணப்படி மற்றும் சிட்டி அலவன்ஸ் உள்ளிட்டவைகளிலும் உயர்வு ஏற்படலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசு ஊழியர்கள்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசுக்கு அதிகளவு செலவு ஏற்பட்டது. அதன் காரணமாக நிதி பற்றாக்குறையை சரி செய்ய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 18 மாத நிலுவை தொகையும் வழங்கப்படாமல் இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் அகவிலைப்படி உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிக்கப்பட்டு 28% வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதனை மேலும் ஜூலை மாதத்தில் 3% உயர்த்தி வழங்கியது. அதன்படி தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு வழங்கி வந்தனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தொடங்கிய பிறகு அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இப்போது 34% அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாவட்ட ஆட்சியரின் உத்தரவு!
இதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு, சிட்டி அலவன்ஸ் மற்றும் பயணப்படியில் உயர்வு வழங்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் வீட்டு வாடகைப்படி, பயணப்படியில் கட்டாயமாக உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். அத்துடன் இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.