மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
மகாராஷ்டிர அரசு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்து உள்ளது..அதாவது 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாக்பாட் அறிவிப்பு:
மத்திய அரசை தொடர்ந்து பல மாநிலங்களும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. இதுவரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி (டிஏ விகிதம்) கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தகவலின்படி, 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. அதன்பின்னர் 5 தவணையாக நிலுவைத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதில் 2 தவணைகளை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இப்போது மூன்றாவது தவணை வழங்கப்பட உள்ளது. மேலும் அரசின் இந்த முடிவால் மகாராஷ்டிரா அரசின் சுமார் 17 லட்சம் ஊழியர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்.
TN Job “FB Group” Join Now
2019 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கும், ஜில்லா பரிஷத் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2019-20ம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளில் 5 தவணைகளில் ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க அரசு முடிவு செய்தது. இதுவரை ஊழியர்களுக்கு 2 தவணைகள் கிடைத்துள்ளன. மூன்றாவது தவணையை ஜூன் மாதம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகிறது . இதன் பின்னர், நான்காவது மற்றும் ஐந்தாவது தவணையும் வழங்கப்படும், அதற்கான பணிகளும் இந்த ஆண்டே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசின் இந்த முடிவால், 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள அரசு ஊழியர்களில் உள்ள குரூப் ஏ அதிகாரிகளின் சம்பளம் அதிகமாக உயரும். சுமார் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை ஒரே நேரத்தில் அதிகரிக்கும். அதே நேரத்தில், குரூப் பி அதிகாரிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை பலன் கிடைக்கும். இதன் கீழ், குரூப் சி அதிகாரிகள் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும், நான்காவது பிரிவில் உள்ளவர்கள் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையிலும் பலன் பெறுவார்கள். மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களின் டிஏ தற்போது 31 சதவீதமாக உள்ளது. அடுத்த தவணையில் இது 34 சதவீதமாக அதிகரிக்கும்.