மது போதையில் ராதிகாவிடம் உண்மையை சொன்ன கோபி, கோவத்தில் வெளியே தள்ளிய ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி ” பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார். அப்போது ராதிகாவிடம் இது தான் என்னுடைய குடும்பம் என காட்ட அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பின் கோபி தன்னை ஏமாற்றியதாக நினைத்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு வருகிறார். மயூரா அவரை பார்த்து பயப்பட ராதிகா அவளை உள்ளே போக சொல்கிறார். அப்போது ராதிகா ஆம்பளைங்க செய்யும் தவறை மன்னிக்க குடி தான் ஒரே வழியா என கேட்க ஆமாம் குடித்தேன் இப்போது என்னை உன் மீது எனக்கு அவ்வளவு ஆசை இருக்கிறது என கோபி சொல்கிறார். நீங்க என்னை ஏமாற்றுகிறீர்கள் என ராதிகா சொல்ல, கோபி நான் என்ன ஏமாற்றுகிறேன் என கேட்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது கோபி இது தான் என்னுடைய குடும்பம் பாரு என ராதிகாவிடம் புகைப்படத்தை காட்ட ஆனால் ராதிகா பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறார். அப்போது கோபி நன்றாக பாரு என்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொன்னாய் என கேட்க அப்போது ராதிகாவின் முகத்தை திருப்பி பார்த்துவிடுகிறார். பின் ராதிகா பாக்கியாவிடம் கோபி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது டீச்சர் என சொல்ல ஆமாம் டீச்சர் உன்னுடைய பெஸ்ட் பிரண்ட் அவங்க தான் என்னுடைய குடும்பம் என சொல்கிறார்.
இந்த உண்மையை நான் மறைத்தேன் ஏமாற்றவில்லை என சொல்கிறார். பின் இனியாவின் புகைப்படத்தை காட்டி இது தான் என்னுடைய மகள் செழியன் எழில் தான் என்னுடைய பசங்க என சொல்ல ராதிகாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ராதிகாவால் எதுவும் பேச முடியாமல் இருக்க நீங்க என்னை ஏமாற்றிவிட்டீர்கள் உங்களை நான் நம்பியது என் தவறு என சொல்கிறார். பின் வெளியே போங்க என சொல்ல அப்போது கோபி இது என்னுடைய வீடு நான் போகமாட்டேன் என சொல்கிறார். பின் ராதிகா கோபியை வெளியே தள்ளி கதவை மூடுகிறார்.
பின் கோபி தள்ளாடிக் கொண்டே காரில் ஏறி செல்ல பாக்கியா வீட்டில் தாத்தாவின் பழைய கதைகளை பற்றி பேசிக் கொண்டு தாத்தா இருக்கிறார். செல்வியை நேரமாகிவிட்டது என சொல்லி கிளம்ப அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி கார் ஓட்ட முடியாமல் ஒரு இடத்தில் நிறுத்த, கோபியின் நண்பர் பாக்கியாவிற்கு போன் செய்கிறார். அப்போது பாக்கியாவிடம் கோபி வந்துவிட்டனா என கேட்க இன்னும் இல்லை என பாக்கியா சொல்கிறார். அப்போது கோபி குடித்துவிட்டு வந்திருப்பதை பற்றி அவர் சொல்கிறார். பாக்கியாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்க, கோபி வந்துட்டாரா என அவருடைய நண்பர் கேட்டதாக பாக்கியா தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு தூங்க போக சொல்கிறார்.