மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 3% அகவிலைப்படி (DA) உயர்வு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 3% அகவிலைப்படி (DA) உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 3% அகவிலைப்படி (DA) உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 3% அகவிலைப்படி (DA) உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து, இப்போது உத்தரகாண்ட் மாநில அரசும் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தி அறிவிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சுமார் ரூ.5000 ஆக உயர வாய்ப்புள்ளது.

DA உயர்வு

கடந்த ஒரு சில மாதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுத் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மீண்டுமாக ஒருமுறை அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை பெற இருக்கின்றனர். அதாவது உத்தரகாண்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3% அகவிலைப்படி உயர்வு கொடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதித்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அரசு இது குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

ExamsDaily Mobile App Download

குறிப்பிடத்தக்க வகையில், மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 34% DA பலனைப் பெற்று வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசுக்குப் பிறகு இப்போது உத்தரகாண்ட் அரசும் தனது ஊழியர்களின் டிஏவை 3% உயர்த்தி அறிவிக்கலாம். இந்த உயர்வு மூலம் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயரும். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுமார் 3.25 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இதன் மூலம் பலனடைய உள்ளனர். இதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி முதல் ஊழியர்களின் டிஏ முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கலாம்!

அதாவது, இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு நான்கு மாத டிஏ நிலுவைத் தொகையும் மே மாதம் முதல் பணமாக வழங்கப்படும். இது தொடர்பாக ஊதிய முரண்பாடு குழுவின் அறிக்கை குறித்து குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் அரசு விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஊழியர் அமைப்புகள் பழைய ஏசிபியை கோரி வரும் நிலையில், ஏசிபி வழங்க குழு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. என்றாலும் ஊழியர்களின் சம்பளம் தொடர்பான விவகாரங்களில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் தாமி தீவிரம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!