அரசு ஊழியர்களுக்கான ‘ஜாக்பாட்’ அறிவிப்பு – உயரப்போகும் சம்பளம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு குறித்து கேபினட் கூட்டத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் அடிப்படை சம்பள உயர்வு அறிவிப்பை தொடர்ந்து விரைவில் அகவிலைப்படி பற்றிய அறிவிப்பையும் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் அறிவிப்பு:
மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கான அடிப்படை சம்பளமும், அகவிலைப்படியும் உயர்த்தப்படும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதமே அகவிலைப்படி உயர்வு மற்றும் அடிப்படை சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றால் Fitment factor உயர்த்த பட வேண்டும்.
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பிப்.15ம் தேதி கலந்தாய்வு!
அந்த வகையில் Fitment factor 2.57ல் இருந்து 3.68ஆக உயர்த்தப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து கேபினட் கூட்டத்தில் சீக்கிரம் முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த Fitment factor உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர் சம்பளம் 18000 அதிலிருந்து 26000 ரூபாயாக உயரும் , இந்த வகையில் அடிப்படை சம்பளம் உயர்த்தால் மொத்த சம்பளமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
மத்திய அரசு, இந்த அடிப்படை சம்பள உயர்வு குறித்து அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடிப்படை சம்பளத்தை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்ப்புகளுடன் அரசு ஊழியர்கள் உள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூன் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.