TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பிப்.15ம் தேதி கலந்தாய்வு!

2
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு - பிப்.15ம் தேதி கலந்தாய்வு!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு - பிப்.15ம் தேதி கலந்தாய்வு!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பிப்.15ம் தேதி கலந்தாய்வு!

தமிழகத்தில் TNPSC குரூப் 4 பணிக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு பிப்ரவரி 15ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு :

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பேரிடர் காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் போட்டி தேர்வுகள் அறிவிப்பு குறித்து எதிர்பார்த்து வந்த நிலையில் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் குரூப்2 மற்றும் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதிக தேர்வர்களால் எழுதப்படும் குரூப்4 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 -9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 15ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் தேதி அக்டோபர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நவம்பர் மாதம் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தர வரிசை எண், இட ஒதுக்கீட்டு விதிகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

மேலும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க உள்ளவர்கள் தங்களது அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதத்தில் கலந்தாய்வு நேரம், தேதி மற்றும் தேவையான விவரங்கள் இடம்பெற்றிருக்கும். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பு கடிதம் தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!