1 -9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

0
1 -9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு முக்கிய அறிவிப்பு!
1 -9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு முக்கிய அறிவிப்பு!
1 -9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

ஹரியானா மாநிலத்தில் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகள் பிப்ரவரி 10ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் முக்கியமான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வந்ததால் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க ஹரியானா அரசு அனுமதி அளித்திருந்தது. அந்த வகையில் அரசு ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட போது இதுவரை தடுப்பூசி போடப்படாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில் ஹரியானாவில் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கு நாளை (பிப்.10) முதல் நேரடி வகுப்புகள் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

அந்த வகையில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள இருக்கும் மாணவர்கள் கட்டாயமாக தெர்மல் ஸ்கிரீனிங் உள்ளிட்ட சில கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கையாள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன் மாணவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் கை சுத்திகரிப்பான்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது, ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால், ‘1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆப்லைனில் பள்ளிகள் திறக்கப்படும்.

பிப்ரவரி 14 முதல் மழலையர் பள்ளிகள் & ப்ளே ஸ்கூல்கள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

ஆனால் பள்ளிக்கு மாணவர்கள் வருவது கட்டாயமாக்கப்படவில்லை என்பதால் ஆன்லைன் வகுப்புகளும் தொடரும்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில் ஹரியானாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 15 லட்சத்திற்கும் அதிகமான, தகுதியுள்ள மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மேலும் நேரடி வகுப்புகள் துவங்கும் போது மாணவர்களிடையே தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!