IPL 2022: சன்ரைசர்ஸ் அணியின் நியூ ஜெர்ஸி இன்று வெளியீடு – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்தில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் இறுதிப் பட்டியலை சமீபத்தில் BCCI வெளியிட்டது. இந்த ஆண்டு மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பு சன்ரைசர்ஸ் அணியின் நியூ ஜெர்ஸியை அவ்வணியின் உரிமை நிறுவனம் இன்று வெளியிடவுள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:
2021 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக துபாயில் நடைபெற்ற 14 வது சீஸனும் சிறப்பாக முடிவடைந்தது. இத்தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை வென்றது. இதை தொடர்ந்து IPL தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன. சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடி வந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக இணைகின்றன.
அரசு ஊழியர்களுக்கான ‘ஜாக்பாட்’ அறிவிப்பு – உயரப்போகும் சம்பளம்!
ஐபிஎல்லின் அனைத்து 10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு IPL யில் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்த நிலையில் இதில் 590 வீரர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2021 ஆண்டின் BCCI யின் விதிமுறையின் படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை 14 கோடி ரூபாய்க்கும், அப்துல் சமத்தை 4 கோடி ரூபாய்க்கும், உம்ரான் மாலிக்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துக் கொண்டது. 3 வீரர்களை தக்கவைத்து பின் இன்னும் 68 கோடி மீதம் உள்ளது.
1 -9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் வில்லியம்சன் தலைமையிலான SRH அணியின் நியூ ஜெர்சியை அந்த அணியின் உரிமை நிறுவனம் இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிட உள்ளது. இது குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பை சன்ரைசர்ஸ் அணி தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. இதற்கு SRH அணியின் ரசிகர்கள் ஆரஞ்சு ஆர்மி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது