மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 5% வரை அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. அதாவது, வருகிற ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மீண்டும் 5% வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் அகவிலைப்படி ஆண்டுக்கு இரு முறை உயர்த்தப்படுகிறது. முதல் முறையாக ஜனவரியில் அதிகரிக்கும். அதன் பிறகு ஜூலையில் உயரும். ஜனவரி மாதத்துக்குப் பிறகு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு, இப்போது மீண்டும் 2022 ஜூலை மாதத்தில் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
சமீபத்திய ஊடக அறிக்கைபடி, ஜூலை மாதத்தில் DA ஐந்து சதவிகிதம் உயர்த்தப்படலாம். இதனால் DA 34% திலிருந்து 39% ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022 ஜனவரி மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 125.1 ஆக இருந்தது. அது பிப்ரவரி மாதத்தில் மேலும் சரிந்து 125 க்கு வந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 புள்ளி ஏற்றம் ஏற்பட்டு 126 ஆக அதிகரித்தது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலையில் இருக்கும்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு கடிதம்!
ஜனவரி, பிப்ரவரியில் நுகர்வோர் விலைக் குறியீடு சரிவு இருந்தபோதிலும், மார்ச் மாதத்தில் ஏற்றம் கண்டுள்ளது. எனவே ஜூலையில் அகவிலைப்படி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். மேலும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் முந்தைய மாதத்தின் 5.35 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 6.33 சதவீதமாகவும், அதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 5.14 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல், உணவுப் பணவீக்கம் முந்தைய மாதத்தின் 6.27 சதவீதத்திலிருந்து 7.05 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 4.78 சதவீதமாகவும் இருந்தது என அதிகாரப்பூர்வ தரவு சேர்க்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் ஏஐசிபி இன்டெக்ஸ், டிஏ 5 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம். இதன் மூலம் ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும்.