மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 39% ஆக உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அதன்படி, 7வது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏவை ஜனவரி 2022ல், 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) தொகை 5% ஆக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு;
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை உயர்த்தப்படும். ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் உயர்த்தப்படும். ஆனால், பணவீக்கத்தைப் பொறுத்து அகவிலைப்படி உயர்த்தப்படாமலும் போகலாம். 2020 ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட நாள் காத்திருப்பிற்கு பலனாக அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச்சில் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்ந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த DA மற்றும் DR உயர்வு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர். இதையடுத்து ஜூலை மாதத்தில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 39 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி 5 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்பது மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) மூலமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!
அதாவது, 2022 ஜனவரி மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 125.1 புள்ளிகளாக இருந்தது. அது பிப்ரவரி மாதத்தில் மேலும் சரிந்து 125 க்கு வந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 புள்ளி மட்டும் உயர்ந்து 126 க்கு வந்தது. மேலும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் அடுத்த அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.